Thursday, March 17, 2011

மறதி...



வார்த்தைகளை சிறைவைக்காமல்
சிறகடிக்கும்
வெள்ளைக் காகிதங்கள்!

எழுத மறந்துபோய்
முனையில் உறைந்துபோன
எழுதுகோல்'மை'!

படிக்காவிட்டாலும்
கலைத்து கலைத்து
அடுக்கப்படாத புத்தகங்கள்!

சிநேகத்துடன்
தினம் பேசும்
மொட்டைமாடி நிலா!

அசைவுகளின்றி 
புழுதிபடிந்து
உறங்கிப்போன ஊஞ்சல்!

மிட்டாய் தந்து
எடுத்து விளையாடும்
எதிர் வீட்டுக் குழந்தை!

எப்போதும்
என் அறையை நிரப்பிவழியும்
இசை!

அதிகாலை துயில்எழுப்ப
அனுமதியின்றி
என் அறைநுழையும்
சூரியக்கதிர்!

அலறி அலறி 
ஒய்ந்துபோன என் கைப்பேசி!
அதில் என் மறுபதிலளிப்பு இல்லாத
பல அழைப்புகள்!..............

இவை எதுவும் 
நினைவில்லை எனக்கு!;
காரணம்
நினைவெல்லாம் நீ!!!!!!!!...              

No comments:

Post a Comment